சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 21, 2014

அட ஆமாயில்ல! – 10



·       இருவேறு உள்ளங்களாய் தனித்தனியாய் இருந்தவர்கள் திருமணத்தால் ஒன்றாகி விடுகிறார்கள். எந்த ஒருவன் ஆவது என்று அவர்கள் தீர்மானிக்க முடியாத போது தான் தொல்லையே தொடங்குகிறது
-       -    ஆன்வில் கோரஸ்


·         தீர்க்கதரிசிகள் தங்களுடைய நாக்கினால் பேசுவதில்லை. அவர்கள் வாழ்க்கையின் மூலமாகவே பேசுகிறார்கள்.
-          மகாத்மா காந்தி


·         அவனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் முடியும் போது அக்கலைஞனுக்கு ஒரு சின்ன அதிருப்தியாவது தோன்றத்தான் செய்கிறது. அப்படித் தோன்றுவது மிகவும் நல்லதாகும். ஏனென்றால் அடுத்த படைப்புக்கான கருவினை அது தான் உற்பத்தியாக்குகின்றது.
-          பெதோல்டு ஆபக்


·         இந்த உலகில் நாம் செய்து விட்ட தவறுகளுக்குத் தருகின்ற கௌரவமான பெயர் தான் அனுபவம்.
-          ஆஸ்கார் ஒயில்டு


·         ஆயிரமாயிரம் பணம் கொடுத்து ஒரு உயர்ந்த ரக நாயை வாங்கி விடலாம். ஆனால் அன்பு ஒன்றால் தான் அதன் வாலை அசைக்க முடியும்.
-          நில் ஒஷிரா

·         எந்த வேலையையும் செய்யாமல் உண்டு உறங்கி வாழ்பவன் மட்டும் சோம்பேறி அல்ல. தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து முடிக்க தன்னிடம் திறமை இருந்து, வசதி வாய்ப்புகள் காணப்பட்டாலும் அதனைச் செய்யாமல் இருக்கின்றானே அவனும் சோம்பேறி தான்.
-           சாக்ரடீஸ்

·         இந்த உலகமானது பலவித பயிற்சிகளைத் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிற பயிற்சிசாலை. நம்மை வலிமையுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளவே நாம் இங்கு வந்து பிறந்திருக்கிறோம்.
-          விவேகானந்தர்

*தன்னை விட சிறந்த அறிவாளி உலகத்தில் யாருமில்லை என்று  எண்ணுபவன் முட்டாளின் முதல் தரம் மட்டுமல்ல. மிக மிக ஆபத்தானவனும் கூட.
                                       - டைதர்

·         ஆயிரம் நன்றி கெட்ட மனிதர்களுக்குக் கூட நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன், அதன் மூலம் ஒரு நன்றியுள்ளவனை எனக்குக் கண்டு பிடிக்க முடியும் என்றால்.
-          செனகா

தொகுப்பு: என்.கணேசன்


No comments:

Post a Comment