சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 8, 2016

சில வார்த்தைகள் - சில அர்த்தங்கள்!


 நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சில வார்த்தைகளுக்கு அகராதியில் எப்படி அர்த்தங்கள் இருந்தாலும் நம் கணக்கில் நிஜமான அர்த்தங்கள் வேறாகவே இருப்பதுண்டு. அப்படி பலர் சொல்லும் சில வார்த்தைகளுக்கு உண்மையான அர்த்தங்கள் இது தான்.

பிழைக்கத் தெரியாதவன்: நாம் செய்யும் அல்லது செய்ய நினைக்கும் அயோக்கியத்தனங்களைச் செய்து பிழைக்காதவன்.

தலைக்கனம் பிடித்தவன்: ஒருவன் நம்மை விட அதிக புத்திசாலியாக இருந்து  அதை நம்மிடமே வெளிப்படுத்துபவன்.

நண்பன்: நமக்குத் தேவைப்படும் உதவிகளை எல்லாக் காலங்களிலும் செய்து கொண்டே இருப்பவன்.

எதிரி: அந்த உதவிகளை ஏதாவது சந்தர்ப்பத்தில் செய்யாதவன் (அல்லது) நிறுத்துபவன்.

அறுவை: நாம் பேசி அவன் கேட்க வேண்டும் என்று நினைக்கையில் அவன் பேசி நம்மைக் கேட்கச் செய்பவன்.

தேசபக்தி: அடுத்த வீட்டுக்காரன் மேல் வரும் ‘கொலை வெறிஅண்டை நாட்டுக்காரன் மேல் வருமானால் அது தேசபக்தி.

தரமான பொருள்: அமிஞ்சிக்கரையில் தயாராகும் பொருள் மீது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாய் முத்திரை இருக்குமானால் அது தரமான பொருள்.

துன்பத்தில் இன்பம்: நமக்குத் துன்பம் வரும் போது அடுத்தவனுக்கு இரு மடங்கு துன்பம் வருமானால் அது துன்பத்தில் இன்பம்.

ஆத்திகவாதி: தனது ஒவ்வொரு துன்பத்திற்கும் இறைவனைத் திட்ட முடிந்த பாக்கியசாலி.

பொறுமைசாலி: நாம் திட்டுவதன் அர்த்தம் புரிந்து கொள்ளாததால் அமைதியாக இருப்பவன்.

என்ன நண்பர்களே எல்லாம் சரிதானே!

-என்.கணேசன்  



6 comments:

  1. உண்மையிலேயே புன்னகைக்க வைத்தது , தேச பக்திக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் .
    ​நன்றி கணேசன் ​

    ReplyDelete
  2. சரியே அண்ணா. . .

    ReplyDelete
  3. awesome...awesome...

    ReplyDelete
  4. Dear Thalaivaa...
    I feel in some of the explanation ...en ganeshan ..touch is missing...

    Even in the last sentence you had asked is it correct?

    G.Ganesh

    ReplyDelete