சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, January 21, 2017

தலை நிமிர வைக்கும் இளைய தலைமுறை!


த்தியின்றி, இரத்தமின்றி, சத்தமின்றி யுத்தம் ஒன்று இங்கு அரங்கேறியிருக்கிறது.

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடலெனக் கூட்டம் கூடிய இளைஞர்கள் காட்டிய கண்ணியமும், பொறுப்புணர்வும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆண்களும், பெண்களுமாய் பெருமளவு கூடிய இடங்களில் ஒரு கண்ணிய நட்புச் சூழலைப் பார்க்க முடிந்தது. கோவையில் வ உ சி பூங்கா பகுதியில் திரண்டிருந்த அவர்கள் தாங்கள் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் காட்டிய அக்கறையும், சில இடங்களில் போக்குவரத்தைச் சீர்ப்படுத்த காவலர்க்கு உதவிய விதமும், ஆச்சரியப்படுத்தியது. பலர் குடும்ப சகிதம் வந்து கலந்து கொண்டார்கள்.

அவர்களுக்குள் யாராவது சொல்லிலோ, செயலிலோ அத்துமீற ஆரம்பிக்கையிலேயே அவர்களில் சிலர் அதைக் கட்டுப்படுத்தினார்கள். அதற்கு சம்பந்தப்பட்ட இளைஞர்களும் கட்டுப்பட்டார்கள். இதைக் காண மனம் நிறைந்தது. உணர்ச்சிகளின் போராட்டத்தில் வன்முறை வெடிக்க பல நூறு காரணங்கள் கிடைக்கும். அப்படி இருந்தும் எதுவும் நிகழ்ந்து விடாமல் இருந்தது நினைக்கவே பெருமையாக இருக்கிறது. சில விஷமிகள் புரளி, வதந்தி பரப்பி போராட்டம் வெடிக்க முயற்சி செய்த போதிலும் இளைஞர்கள் அதற்கு இடம் தராமல் அதைப் புறக்கணித்து அமைதி காக்க வழிவகுத்தார்கள் என்ற செய்திகளும் கிடைத்தன. காவல்துறையும் பொதுமக்களும் தங்களுக்குள் இளையதலைமுறையைப் பாராட்டிப் பேசிக்கொண்டதை பல இடங்களில் கேட்க முடிந்தது.

இதில் பேரதிர்ச்சி அடைந்தது அரசியல்கட்சிகளாகத் தான் இருக்கும். பணம், பிரியாணி வகையறாக்களைக் கொடுத்து ஆள் திரட்டி தங்கள் பொதுக்கூட்டங்களுக்குத் தருவித்துப் பழகிய அவர்களுக்கு தானாகக் கூடிய இளைஞர் படை அதிர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். சொந்த லாப நஷ்டங்களை வைத்தே அரசியல் பிழைப்பு நடத்தும் பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்தப் போராட்டத்திற்குத் தங்கள் கட்சி சாயம் பூச முயற்சித்து தோற்றுப் போனதைப் பார்த்து ரசிக்க முடிந்தது.

இளைஞர்களே உங்களுக்குப் பாராட்டுக்கள். தேவை ஒன்று வரும் போது உங்களால் அலட்டிக் கொள்ளாமல் இராணுவ ஒழுங்குடன் விசுவரூபம் எடுக்க முடியும் என்று காட்டியிருக்கிறீர்கள். சபாஷ். இது போதும், இனி இந்த தேசம் விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கிருக்கிறது!

என்.கணேசன்

   

7 comments:

  1. Thanks brother,
    Thanks for the article

    ReplyDelete
  2. 200% agree with you.very proud about our Tamil Students

    ReplyDelete
  3. தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்குமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    ReplyDelete
  4. True. When the dark rises, light will be fired..

    ReplyDelete
  5. காவல் துறை அராஜகத்தை எதிர்க்க ஒருவர் கூட இல்லையா ???

    ReplyDelete
  6. very true. I am so proud of our kids:). unfortunately the latest news is not desirable due to some bad people at the end of game. It is expected :(

    ReplyDelete