சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, August 9, 2017

எனது வலைத்தமிழ் வானொலிப் பேட்டியின் காணொளி!

அன்பு வாசகர்களே வணக்கம்!

வாசக அன்பர்கள் கேட்டுக்கொண்டபடி வலைத்தமிழ் வானொலிக்கு நான் அளித்த பேட்டியை காணொளியாக்கி பதிவு செய்துள்ளேன்.

சித்தர்கள் இப்போதும் இருக்கிறார்களா? சந்தித்திருக்கிறீர்களா?
இருவேறு உலகம் நாவலில் சொல்வது போல் எண்ண அலைகள் மூலமாக காட்சியாகக் காண்பது சாத்தியமா?
அமானுஷ்யன் நாவல் எப்படி உருவாயிற்று?
பரமன் ரகசியத்திற்கு முன்பு உத்தேசித்திருந்த முடிவு என்ன?
நீ நான் தாமிரபரணி நாவல் போன்ற காதல் இன்று சாத்தியமா? ஆழ்மனசக்திகளின் தேடல் உங்களுக்கு எப்படி உதித்தது?
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

போன்ற மைதிலி தியாகு அவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு நான் கூறிய பதில்களை நீங்களே இங்கு கேட்டுக் கொள்ளுங்கள்.



என்.கணேசன்

13 comments:

  1. சுஜாதாAugust 9, 2017 at 8:51 AM

    சூப்பர் கேள்விகள் சூப்பரோ சூப்பர் பதில்கள். மைதிலி நான் நினைக்க நினைச்ச கேள்வி எல்லாமே கேட்டு விட்டிங்க. ஆனா ஒன்னே ஒன்ன விட்டுட்டீங்களே. வாரம் ரெண்டு தடவை இருவேறு உலகம் போடச் சொல்லி கேட்டிருக்கலாமே. கணேசன் சார் குரல்லயே அவரோட அற்புதமான வார்த்தைகளை கேட்க பரவசமா இருந்துது. நன்றீ.

    ReplyDelete
  2. உங்களின் தெளிவான சிந்தனைகள்,செயல்கள் மற்றும் பேச்சுக்கள்...
    வெளிப்பட்டது உங்கள் பதில்களில்......நன்றி......வாழ்த்துகள்.....

    பரம(ன்) ரகசியம் பற்றி எழுத நினைத்தெல்லாம் இறுதி அத்தியாயத்தின் பிரம்மாண்டத்தில்
    அனைத்தும் மறைந்து விட்டது......

    ReplyDelete
  3. your voice is very attractive. why don't you upload audio version of each week story as well. (like Kathaisolli)

    die hard fan

    ReplyDelete
  4. Excellent interview. Calm and cool voice. I felt as if you are talking to me.

    ReplyDelete
  5. வரதராஜன்August 9, 2017 at 6:38 PM

    ஒரு வாசகியையே பேட்டி எடுக்க வைத்த வலைத்தளத்துக்கு பாராட்டுகள். அதனால் செயற்கைத்தனமில்லாமல் ஆவலுடன் பேட்டி எடுத்தார் மைதிலி தியாகு. என்.கணேசன் சாரின் குரலைக் கேட்க முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. எழுத்தில் இருக்கும் அதே சாந்தமும், பக்குவமும் குரலிலும் உணர்ந்தோம்.

    ReplyDelete
  6. சரோஜினிAugust 9, 2017 at 6:52 PM

    என்னை போன்ற முதியோர் முதல் இளைஞர்கள் வரை கவர்ந்திழுக்கும் கண்ணியமான எழுத்து என்.கணேசனுடையது. அவருக்கு இருக்கும் திறமையின் அளவுக்கு அவரை தமிழ் எழுத்துலகம் இன்னமும் முழுமையாக அறியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. இது போன்ற பேட்டிகள் அவரை மேலும் அறிய உதவும். அவருடைய எல்லா நாவல்களும் பல முறை படித்தாலும் சலிக்காதவை. பேட்டி எடுத்த மைதிலி தியாகுவின் கேள்விகள் அனைத்தும் தீவிர வாசகர் மனதில் எழுபவை. கேட்ட மைதிலி தியாகுவிற்கும், ஆணியடித்த மாதிரி சிறப்பாக பதில் அளித்த கணேசனுக்கும் ஆசிர்வாதம்.

    ReplyDelete
  7. Most inspirational words from you sir. all are golden words.

    ReplyDelete
  8. உயர்ந்த சிந்தனைகள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

    ReplyDelete
  9. எல்லா கேள்விகளுக்கும் உங்கள் பதில் யாதார்த்தத்தையும் தத்துவத்தை பக்குவத்தையும் உண்மையையும் உள் அடக்கியதாய் இருந்தது அருமை வாழ்த்துக்கள் G

    ReplyDelete
  10. நல்லதொரு உரையாடலை கேட்ட நிம்மதி கிடைத்தது. உங்களின் பதில்கள் அனைத்தும் தெளிவாக இருந்தன, உங்களின் எழுத்துக்களை ரசித்த அளவிற்கு உங்களின் பேச்சையும் ரசித்தேன். பகிரிந்தமைக்கு நன்றி. கேள்விகளை தேர்ந்தெடுத்து கேட்ட திருமதி மைதிலிக்கும் நன்றி.

    ReplyDelete
  11. இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்றுதான் இந்த வானொலிப்பேட்டியை கேட்க நேர்ந்தது.நல்ல கேள்விகள் அற்புதமான பதில்கள்.பேட்டியைகேட்டு முடித்ததும் ஒரு நல்ல மனநிறைவான உணர்வு கிடைக்கிறது. அதற்கு தங்களிடையே நான் உணரும் தெளிவான மனப்பாங்கும் ஆழமான சிந்திக்கும் திறமையும் அழுத்தமாக அதை எழுத்திலாகட்டும் அல்லது வார்த்தைகளிலாகட்டும் நீங்கள் தரும் விதமே.அதற்கு தங்களின் எழுத்திலும் பேச்சிலும் உள்ள காந்த சக்திதான் பெரிய அளவில் பிறரை ஈர்க்கிறதாக நினைக்கிறேன்.இதன் பின்னணியில் இதைப்பெறுவதற்கும் அடைவதற்கும் தாங்களின் இடைவிடா கடும்முயற்சியையும்நினைத்துப்பார்க்கிறேன்.அனைவரையும் ஈர்ப்பது என்பது சாதாரணமான ஒன்று அல்ல.அதை நீங்கள்சாதித்துள்ளீர்கள்.எல்லாவகையிலும் மேலும் நீங்கள் மேன்மைபெற வாழ்த்துகிறேன்.நன்றி வணக்கம்

    ReplyDelete
  12. exact questions that I am about to ask him well done Mythili. It is truly changed Mr.Ganeshan's writings. Wahtever Mr.Ganeshan wants, he achieved. awesome well done

    ReplyDelete
  13. Excellent Interview about the great author, Mythili! Every time I listen to the interview getting different experience and insights! Very thoughtful interview questions and a very direct and open answers! Very well done! Special thanks for starting the interview with my poem lines. How nice!

    ReplyDelete