சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 30, 2017

என் இரண்டு புதிய நூல்கள் வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம். 
இன்று எனது இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஒன்று ஆழமனசக்தி அடையும் வழிகள். இன்னொன்று  என் சிறுகதைகள். ஒன்றின் முன்னுரையும், உள்ளிருக்கும் தலைப்புகளும்,  இன்னொன்றின் சிறுகுறிப்பும் இதோ-

ஆழ்மனசக்தி அடையும் வழிகள்! - 

முன்னுரை-

ழ்மனதின் அற்புத சக்திகள் நூலுக்கு வாசகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பது அமோகமானது. அந்த நூல் மூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் தாண்டி இப்போதும் மிகவும் வேகமாக விற்பனையாகி வருகிறது. மிகவும் படித்த அறிவார்ந்த வாசகர்களில் இருந்து, அதிகம் கல்வியறிவு இல்லாத சாதாரண வாசகர்கள் வரை பல தரப்பு மக்கள் வாங்கிப் படிக்கும் புத்தகமாக அது இன்றும் இருந்து வருகிறது. இன்றும் வாரம் ஓரிரு வாசகராவது என்னைத் தொடர்பு கொண்டு ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் குறித்து பாராட்டு தெரிவிக்கிறார்கள், சந்தேகம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்கிறார்கள், ஆழ்மனசக்திக்கு வகுப்புகள் ஏதாவது நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். மொத்தத்தில் இன்றும் வாசகர்கள் பேசுகிற, படித்து மகிழ்கிற, மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிற ஒரு உன்னத நூலாக அது இருந்து வருகிறது.


ஆழ்மனதின் அற்புத சக்திகள் குறித்து நான் சேர்த்து வைத்திருக்கிற தகவல்கள் ஏராளம். அவற்றில் ஒரு பகுதியை மட்டுமே ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் தந்திருக்கிறேன். அந்த சக்திகள் நான் குறித்து சிந்தித்ததும், சோதித்துப் பார்த்ததும் கூட கொஞ்ச நஞசமல்ல. அந்த அற்புத விஷயங்களின் பிரம்மாண்டத்தில் நான் பிரமித்துப் போயிருக்கிறேன். 

 அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுஎன்ற அவ்வையின் வார்த்தைகள் சத்தியமானவை. மனிதனின் ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும் சக்திகள் மகத்தானவை. அவை சாதாரண மனிதனின் கற்பனைக்கும் எட்டாதவை. அவற்றை அவன் முறையாகப் பயன்படுத்த முடிந்தால் அவனால் எட்ட முடியாத உயரங்கள் இல்லை, செல்ல முடியாத தொலைவுகள் இல்லை, சாதிக்க முடியாத சாதனைகள் இல்லை. அவன் கற்பனையே அவன் எல்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த பிரம்மாண்ட சக்திகளைப் பற்றி மேலும் விரிவாக விளக்கும் விதமாகவே இந்த நூலை எழுதுகிறேன். அவை குறித்த ஏராளமான, ஆழ்மன அற்புத சக்திகள் நூலில் சொல்லாத, கூடுதல் விஞ்ஞான ஆராய்ச்சிகளை இந்த நூலில் எழுதியுள்ளேன். அந்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் பற்றியும், கருத்து தெரிவித்த பேரறிஞர்கள் பற்றியும் சொல்லா விட்டால் சொல்கின்ற தகவல்கள் என் அதீத கற்பனையாகக் கூட வாசகர்களுக்குத் தோன்றலாம். மேலும் ஆராய்ச்சிகள் மூலம் விளக்கும் மகத்தான சக்திகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை விரிவாகவே இதில் விளக்கியுள்ளேன்.  ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் படித்து விட்டுப் பல வாசகர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் பதிலையும், அவர்கள் அனுபவங்கள் குறித்த என் கருத்துகளையும் ஒரு தனி அத்தியாயமாகவே தந்திருக்கிறேன்.

ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலின் இரண்டாம் பாகமாக வரும் இந்த நூலைத் தனியாகவே வாசகர்கள் படித்தும் பயன்பெறலாம். ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூல் படித்த வாசகர்களுக்கு அடுத்த கட்ட வழிகாட்டுதலாக இந்த நூல் அமையும். உடல் நலம், மன நலம், வளமான நிறைவான வாழ்க்கை ஆகியவற்றிற்கு ஆழ்மனசக்திகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் இந்த நூலில் தந்துள்ளேன்.

அன்பு வாசகர்களே, இந்த நூலை ஆழமாகப் படியுங்கள். அடிக்கடி படியுங்கள். படித்ததை நிறைய சிந்தியுங்கள். சொல்லி இருப்பவைகளில் முடிந்ததை எல்லாம் பின்பற்றிப் பாருங்கள். பின் உங்கள் வாழ்க்கை சாதாரண வாழ்க்கையாக இருக்காமல் ஒரு அற்புத வாழ்க்கையாகி விடும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

பிரபஞ்ச சக்தியின் ஆசிர்வாதமாகவே இந்த நூல் உங்கள் கையில் கிடைத்திருக்கிறது. பயன்படுத்தி சிறப்படையுங்கள் என்று மனதார வாழ்த்துகிறேன். வாருங்கள், உங்களுக்கு சகல உரிமையும் உள்ள ஒரு பிரம்மாண்ட சக்தி உலகிற்குச் செல்வோம்....

அன்புடன்
என்.கணேசன்


விலை ரூ 200/-


நூலின் அத்தியாயத் தலைப்புகள்
1.   ஆழ்மனம்-ஒரு ஆழமான பார்வை
2.   ஆழ்மனம் இயக்கும் செல்கள்- விஞ்ஞானப் பார்வை
3.   தவறான நம்பிக்கை தடுமாறும் வாழ்க்கை!
4.   நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கும் ஆழ்மனம்!
5.   ஒருவரை இளமையாக்கும் ஆழ்மனம்!
6.   மயக்க மருந்தில்லா அறுவை சிகிச்சைகள்!
7.   மரணத்தை வென்று மருத்துவர்களைக் குழப்பியவர்கள்!
8.   மருத்துவம் அறியாத ஆழ்மன மகத்துவம்!
9.   குணமாகும் தருணங்களில் உணர்ந்தது என்ன?
10. விஞ்ஞானம் அளக்க முடிந்த ஆழ்மன சக்திகள்!
11. ஆழ்மனசக்தியும் மரபணுத் தகவல் கட்டமைப்பும் (DNA)
12. எதை நீங்கள் ஈர்க்கிறீர்கள்?
13. எண்ணங்களில் உள்ளது சூட்சுமம்!
14. எண்ண வைரஸ்களை நீக்குங்கள்!
15. ஆக்கபூர்வ எண்ணங்களை வலிமையாக்குங்கள்!
16. ஆழ்மன செயல்திட்டங்களைத் திருத்துங்கள்!
17. ஆழ்மனதை வசப்படுத்த சில வழிகள்!
18. ஓய்வான மனநிலையின் மகத்துவம்!
19. காட்சிப்படுத்தும் கலைப்பயிற்சிகள்!
20. மூளையை முழுத்திறனோடு வைத்திருக்க வழிகள்!
21. ஆழ்மனசக்தியில் தியானத்தில் பங்கு!
22. உங்களை மாற்றிக் கொள்வதெப்படி?
23. உண்மையான உள்ளுணர்வைப் பெறுவதெப்படி?
24. தொலைதொடர்பு சக்தி பெறுவதெப்படி?
25. கனவுகள் மூலம் ஆழ்மனச் செய்திகள்!
26. சக்தி அலைகளைப் படிக்கும் யுக்தி!
27. தொலைநோக்கு சக்தி பெற முடியுமா?
28. உடலை விட்டு வெளியே பயணிக்க முடியுமா?
29. போதை வழி வரும் சக்திகள்
30. மேலும் சில சக்தியாளர்கள்!
31. பன்முக ஆளுமை என்னும் அதிசயம்!
32. மேலும் சில ஆராய்ச்சியாளர்கள்!
33. வாசகர்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்!
34. முடிவல்ல ஆரம்பம்!


என்.கணேசன் சிறுகதைகள்


விலை. ரூ 220/- 

என் அனைத்து சிறுகதைகளிலும் மானுடமே அடித்தள நாதமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான சிறுகதைகளில் மனிதனின் உயர்குணங்களே சிறப்பான அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அன்பு, காதல், கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை, வாழும் கலை, அறிவுபூர்வமான அணுகுமுறை ஆகியவையே கருவாகவும், பாடமாகவும் அமைந்திருக்கின்றன. கடவுளில் இருந்து கடைகோடி மனிதர்கள் வரை கதாபாத்திரங்களாக இருக்கும் இச்சிறுகதைகளைப் படித்து முடிக்கையில் நினைவில் தங்குவதும், மின்னுவதும் மானுடமாக இருக்கும். 

இந்த இரு நூல்களையும் வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ, blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

வெளிநாட்டு, உள்நாட்டு வாசகர்கள் முழுமையான தகவல்கள் அறிய-
https://blackholebooks.wordpress.com/books-purchase/

அன்புடன்
என்.கணேசன்

8 comments:

  1. Please can you provide online purchase website link.

    ReplyDelete
    Replies
    1. https://blackholebooks.wordpress.com/books-purchase/

      Delete
    2. Available for online purchase @

      http://nammabooks.com/index.php?route=product%2Fproduct&product_id=15686

      Delete
  2. இந்த இரண்டு நூல்களை வழங்கியதற்கு நன்றி ஐயா.
    ..

    ReplyDelete
  3. congratulations!. I'd like to read the books

    ReplyDelete
  4. இரண்டு நூல்களையும் வாங்கிவிட்டேன், கண்டிப்பாக இது எங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்று நம்புகிறேன், நன்றி என் கணேசன் அவர்களே உங்கள் முயற்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.
    தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. Very nice, useful .ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? Super.

    ReplyDelete